விடியாத இரவில் - கலையாத கனவுகள்
திறக்காத கண்களில் - தீராத நினைவுகள்
நிஜமாகும் நினைவுகள் - நிழலென தினம் தினம்
நிஜங்களே நினைவாகும் மெய் பொய்யாகி
கனவான நினைவுகளெல்லாம் - நிஜமாக நிகழ்கிறதே
கனவு நிகழ்வதால் - நெகிழ்வதா, இல்லை
நிழல் நிஜமாவதால் - நடந்ததை நடிப்பதா
நிலையில்லாமல் - நடப்பதையே நினைப்பதா
நடப்பது நடந்ததால் - நகைப்பதா
கனவாக கலைந்தாலும்
நிஜமாக நிகழ்ந்தாலும்
கண்டதும் காண்பதும் கவிதையே !!!
மனேஷ்.L