கார்த்திகை பெண்
அன்று ஒரு கனவு
அழகான தேவதை ஒருத்தி
வானத்தில் இருந்து
மெல்ல இறங்கி வருகிறாள்
கண் முன்னே நிற்கிறாள்
விண் மீனாய் ஜொலிக்கிறாள்
கார்த்திகை பெண்களில் ஒருத்தி நான்
கார்த்திகேயனின் அன்னை நான் உங்களுடன் உறவில் கலக்க
கார்த்திகை நாளன்று
கட்டாயம் வருவேன்
காத்திருங்கள் என
கவிதையாய் கலந்தாள்
காணாமல் போகினாள்
கனவும் கலைந்தது , கவலையும் சூழ்ந்தது.
என்ன அதிசயம் ?
கார்த்திகை நாளன்று
கண் முன்னே காட்சி தருகிறாள்
கவினுடன் அந்த இளம் தேவதை
கை கால் புரியவில்லை
கிள்ளிப் பார்க்கிறேன்
நிஜமான நிஜம் தான்.
அழகான மலராய் சிரிக்கிறாள்
அடுத்த நொடி அழுகிறாள்.
காலம் முழுவதும்
உங்களுடனே வாழ்கிறேன் என்று
காவியமாய் சிரிக்கிறாள்
ஓவியமாய் மிளிர்கிறாள்
நீங்கள் தேடிய
தேவதை வந்து விட்டேன் என்று
தேன் மழை பொழிகிறாள்
இனி எங்கள் வீட்டில் எல்லா நாளும்
கார்த்திகை திருக் கார்த்திகை



